தன்னார்வத் தொண்டர்
“இன்னொருவர் வாழ்வை நீங்கள் எவ்வளவு ஆழமாகத் தொடுகிறீர்களோ அந்த அளவு உங்கள் வாழ்க்கை வளமாகும்.” -ஆசிகள், சத்குரு
ஈஷா அறக்கட்டளையானது முழுவதும் தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படுகிறது. ஈஷா அறக்கட்டளை மற்றும் உலகெங்கும் உள்ள அதன் மையங்களின் ஒவ்வொரு செயலுமே தன்னார்வத் தொண்டின் அடிப்படையில்தான் நடத்தப்படுகிறது.
ஈஷா அறக்கட்டளையானது, ஒவ்வொரு மனிதரிலும் உள்ள உள்நிலைத் தேடுதலுக்கு உதவுவதற்காக பணிபுரிகிறது. வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் இயற்கையாகவே ஆன்மீகம் பொதிந்திருக்கிறது என்றும் கரங்கள்(கர்ம யோகா), இதயம்(பக்தி யோகா) மற்றும் தலை(ஞான யோகா) ஆகியவற்றின் இணைப்பு உள்நிலை வளர்ச்சிக்கான மகத்தான சூத்திரமாக இருக்கும் என்றும் சத்குரு தெளிவாக எடுத்துரைக்கிறார். 2,50,000க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், உலகளாவிய இந்த அமைப்பை நிர்வகிப்பதன் மூலம், தங்களின் சுயநலமற்ற சேவையின் மூலம், உள்நிலையில் வளர்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.
|