-
சந்தா செலுத்தி முடித்தவுடன் முதல் இதழ் எனக்கு எப்போது கிடைக்கும்?
முதல் இதழ் உங்களுக்கு கிடைக்க 2லிருந்து 6 வாரங்கள் ஆகும். இந்த இடைவெளி சாதாரணமாக நடைமுறையில் உள்ள ஒன்றுதான். சந்தா படிவம் பெற்றவுடன், அதை சந்தாதாரர்கள் பட்டியலில் இணைக்கவே 1லிருந்து 2 வாரங்கள் ஆகும். பிறகு அடுத்த மாத இதழ் உங்களுக்கு அனுப்பப்படும். உதாரணமாக, உங்கள் சந்தா படிவத்தை நாங்கள் அக்டோபர் கடைசி வாரத்தில் பெற்றால், அதற்குள் நவம்பர் மாத இதழ் அனுப்பப் பெற்றிருந்தால், உங்களுக்கு டிசம்பர் மாதத்திலிருந்து இதழ் அனுப்பப்படும்.
எனவே 2லிருந்து 6 வாரங்கள் அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்தக் காலகட்டததிற்குள் உங்களுக்கு இதழ் கிடைக்க வில்லையென்றால், எங்களுக்கு மின் அஞ்சல் அல்லது தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கவும். முதல் இதழ் எப்போது நீங்கள் கிடைக்கப் பெறுகிறீர்களோ அப்போதிலிருந்து உங்கள் சந்தா கணக்கு ஆரம்பிக்கிறது. 1 வருட சந்தாவிற்கு 12 இதழ்களும், 2 வருட சந்தாவிற்கு 24 இதழ்களும், 3 வருட சந்தாவிற்கு 36 இதழ்களும் கிடைக்கும்.
-
இணையதளம் மூலமாக நான் என் சந்தாவை புதுப்பிக்க முடியுமா?
முடியும். புதுப்பிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும் கேள்விக்கு 'ஆம்' என்று தேர்வு செய்யுங்கள். பிறகு தற்போது காட்டுப்பூ இதழ் வரும் உறையின் மீதுள்ள அதே சந்தா எண் மற்றும் விலாசத்தையும் மீண்டும் குறிப்பிடுங்கள். மற்றதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.
-
என் நண்பர் பெயரில் சந்தாவை நன்கொடையாக அளிக்க விரும்புகிறேன். அதை எப்படிச் செய்வது?
நன்கொடை என்னும் பகுதியைத் தேர்வு செய்யுங்கள். பிறகு உங்கள் நண்பரின் பெயர், விலாசம் மற்றும் மின்னஞ்சலைக் குறிப்பிடுங்கள். பின்னர் ஈஷா காட்டுப்பூ அலுவலகத்திலிருந்து, உங்களுக்கு நண்பருக்கு, நீங்கள் சந்தாவை அவருக்காக நன்கொடையாக செலுத்திய விபரத்தை, மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பர்.
-
. இணையதளம் மூலம் சந்தா செலுத்துவது பத்திரமானதா?
இணையதளம் மூலம் நீங்கள் சந்தா செலுத்தும்போது உங்கள் சொந்த விபரங்கள் வேறு யாரும் பார்க்கமுடியாது. நாங்கள் ஷிஷிலி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், நீங்கள் குறிப்பிடும் விபரங்கள் வேறு யாரும் பார்க்கமுடியாதபடி, உங்கள் கணிணியிலிருந்து எங்கள் கணிணிக்கு நேரடியாக வந்துவிடுகிறது.
-
என்னிடம் க்ரெடிட் கார்டு இல்லை. நான் எப்படி சந்தா செலுத்துவது?
ஈஷா காட்டுப்பூ சந்தாபடிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து, தொகை செலுத்திய விபரங்களுடன், சந்தா படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அனுப்புங்கள். தற்போதைக்கு இந்தியாவில் மட்டுமே ஈஷா காட்டுப்பூ அஞ்சலில் அனுப்பப்படுகிறது.
and follow the instructions to send payment by mail (please note, subscriptions are currently available to Indian addresses only).
-
இதழ் எனக்கு வந்து சேர வில்லையென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?
தயவுசெய்து உடனே எங்களுக்குத் தெரியப்படுத்தவும். இணையதளத்தில் அதற்னெ உள்ள படிவத்தை பூர்த்தி செய்தால் 3 நாட்களுக்குள் பதில் அனுப்பப்படும். அல்லது
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது (044) 45011137 ; 96770 16700 ஆகிய தொலைபேசி எண்களுக்கோ தொடர்பு கொள்ளலாம்.
-
வேறு கேள்விகளோ அல்லது பிரச்சினைகளோ இருந்தால் நான் என்ன செய்யவேண்டும்?
உங்களின் எந்த கேள்விக்கும் ஈஷா காட்டுப்பூ குழு உதவி செய்யும். இணையதளத்தில் அதற்னெ உள்ள படிவத்தை பூர்த்தி செய்தோ அல்லது
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
என்ற மின்னஞ்சலுக்கோ தொடர்பு கொண்டால் 3 நாட்களுக்குள் பதில் அனுப்பப்படும்.
-
வெளிநாட்டு நண்பர்களுக்கு நான் சந்தா செலுத்த முடியுமா?
தற்போதைக்கு இந்தியாவில் மட்டுமே இந்த இதழ் அனுப்பப்படுகிறது.
-
எனக்கு க்ரெடிட் கார்டும் இல்லை, இணையதளம் பயன்படுத்தவும் விரும்பவில்லை. நான் எப்படி சந்தா செலுத்துவது?
வெறுமனே சந்தா படிவம் பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்பமுடியும். உங்களுக்கு முடிந்த வழிகளில் உதவ நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.
-
என் அஞ்சல் விலாசம் மாறிவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
இணையதளத்தில் அதற்னெ உள்ள படிவத்தில் உங்கள் புது விலாசம் மற்றும் பழைய விலாசம் இரண்டையும் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
அல்லது
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது (044) 45011137 ; 96770 16700 ஆகிய தொலைபேசி எண்களுக்கோ தொடர்பு கொள்ளலாம்.
-
என் சந்தா எப்போது முடிகிறது என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது?
உங்கள் சந்தா முடியும் நேரத்தில் உங்களுக்கு ஒரு நினைவூட்டல் அனுப்பப்படும். அதற்கு முன்பே கூட நீங்கள் சந்தாவைப் புதுப்பிக்க முடியும். நீங்கள் குறிப்பிட்டு ஏதும் சொல்லாவிட்டால், உங்கள் பழைய சந்தா எப்போது முடிகிறதோ அப்போதிலிருந்து உங்கள் புதிய சந்தாவை அமலுக்குக் கொண்டு வருவோம்.
-
நீங்களே என் சந்தாவை தானாக புதுப்பித்துக் கொள்வீர்களா?
இல்லை. உங்கள் சந்தா தானாக புதுப்பிக்கப்பட மாட்டாது. உங்கள் சந்தா முடியும் நேரத்தில் உங்களுக்கு ஒரு நினைவூட்டல் அனுப்பப்படும். அதற்கு முன்பே கூட நீங்கள் சந்தாவைப் புதுப்பிக்க முடியும். நீங்கள் குறிப்பிட்டு ஏதும் சொல்லாவிட்டால், உங்கள் பழைய சந்தா எப்போது முடிகிறதோ அப்போதிலிருந்து உங்கள் புதிய சந்தாவை அமலுக்குக் கொண்டு வருவோம்.
-
என் தற்போதைய சந்தா முடிவடைவதற்கு முன்பே நான் சந்தாவைப் புதுப்பித்தால், இரண்டு இதழ்கள் எனக்கு வந்து விடுமோ?
இல்லை. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்தாவை புதுப்பித்துக் கொள்ளலாம். சந்தா செலுத்தும்போது, 'புதியது' அல்லது 'புதுப்பித்தல்' என்பதில் புதுப்பித்தல் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, பழைய சந்தா எப்போது முடிகிறதோ அதற்குப் பிறகு புதிய சந்தா அமலுக்கு வரும்.
-
. பணம் திரும்பப்பெறும் வசதி உண்டா?
பணம் திரும்பத்தரப்பட மாட்டாது. ஆனால், எங்களுக்கு நீங்கள் வேறு விலாசம் கொடுக்கும் பட்சத்தில், மீதியுள்ள மாதங்களுக்கான இதழ்களை அவர்களுக்கு அனுப்புவோம்.