பகிர்வுகள் மற்றும் அனுபவங்கள்
""நான் ஈஷா யோக மையத்திற்கு வந்தபோது, சிறிது தூரம் கூட என்னால் நடக்க முடியாத நிலையிலிருந்தேன். இங்கே 4 வாரங்கள் தங்கியிருந்து, தொடர்ந்து செய்த ஈஷா யோகா பயிற்சிகளுக்குப்பிறகு, ஒரு சில மாதங்களுக்குள், பை-பாஸ் சர்ஜரியை தவிர்த்ததோடு மட்டுமின்றி உண்மையிலேயே 6 கி.மீ மலையேற்றமும் மேற்கொண்டேன். சிகிச்சை முறை மட்டுமே இதற்கு உதவியதாக நான் உணரவில்லை. இந்த சூழல், உணவு, அன்பும் ஆதரவுமான கவனிப்பு ஆகியவை என் ஆரோக்கியத்தை பெருமளவு மீட்டுத்தர உதவின"." ... எஸ். சதாசிவம், தமிழ்நாடு.
" "பக்கவாதத்தின் பாதிப்பினால் பேச இயலாமலும், என் இரண்டு கால்களும், கைகளும் சரிவர செயல்படாமலும் இருந்தேன். என் முகத்தின் இடதுபுறம் மரத்துப் போயிருந்தது. நான் ஈஷா மையத்தில் 29 நாட்கள் தங்கியிருந்தேன். சுமார் 95% பேசும்திறனை திரும்பப் பெற்றேன். குறைந்தபட்ச உதவியோடு என் வலது கையை நீட்டவும், இயல்பாக நடக்கவும் முடிகிறது. மரத்துப் போவதும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவிட்டது. மனரீதியாக, மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன்." ." ... எஸ். மோகனசுந்தரம். 36 வயது, தமிழ்நாடு.
" "கண் அழுத்த நோயினால் (கிளாக்கோமா) எனக்கு பக்கவாட்டுப் பார்வைத்திறன் இல்லாமல் போனது. மையப் பார்வைத் திறன் 35% தான் இருந்தது. புத்துணர்வு மையத்தில் 4 வாரங்கள் தங்கியிருந்தேன். இப்போது என் பார்வைத்திறன் அதிகரித்திருக்கிறது. முன்னெப்போதையும் விட நன்றாக உணர்கிறேன். இதைக் குணப்படுத்த முடியாதென மருத்துவர்கள் கூறியிருந்தனர். உலகத்திலேயே நான்தான் மகிழ்ச்சியாக இருப்பது போல உணர்கிறேன்." ... சுபத்ரா, 24 வயது, தமிழ்நாடு.
""நான் குதிரை மீரிருந்து கீழே விழுந்து, முதுகின் கீழ்ப்பகுதியில் தீராத வலியுடன், கடந்த 10 வருடங்களாக அவதிப்பட்டேன். அக்குபங்கர், ரெய்கி போன்ற சிகிச்சைகளை முயன்று பார்த்தும் அதில் தோல்விதான். படுக்கையிலேயே காலம் கழிக்க விரும்பாமல் இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில் ஈஷா யோகா மையத்திற்கு வந்தேன். 2 வாரங்கள் புத்துணர்வு மையத்தில் தங்கி இருந்தேன். இப்போது என்னுடைய கீழ் முகுதுவலி உண்மையிலேயே குறைந்துவிட்டதுடன், என்னுள் ஏதோ ஒருவித அமைதியை உணர்கிறேன்."." ... ஜோர்டன், வெனெய்ல், 30 வயது.