சுற்றுப்புறச் சூழ்நிலையில் அமைதியைக் கசியவிட்டவண்ணம், செழுமையும், மண் மணமும் இணைந்து, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ஈஷா குடியிருப்புகள், விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்கின்றன. தனித்துவமான உள்கட்ட வடிவமைப்பும், ஈஷாவினால் உருவாக்கப்பட்ட மரத்தினாலான பொருட்களும் கொண்ட தனித்து விளங்கும் குடியிருப்புகள், வசதியான, சுகமான, எளிய கிராமிய உணர்வை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ஒன்றிலிருந்து மூன்று நபர் வரை தங்கக்கூடிய விதத்தில், இணைக்கப்பட்ட குளியலறையுடன் நாற்காலி, மேஜை போன்றவைகளுடன் முழுமையான தயார் நிலையில் உள்ளது. சில அறைகள் குளிரூட்டப்பட்டவைகளாக இருக்கும். அந்த அறைகள் தேவைப்படின் கூடுதல் கட்டணத்துடன் முன்னதாகவே பதிவு செய்யப்பட வேண்டும்.

முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே ஈஷா குடியிருப்புகள் கிடைக்கின்றன. அறைகளின் எண்ணிக்கை குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருக்கும் காரணத்தால், வருகை தேதிக்குக் குறைந்த பட்சம் 2 வாரங்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நடைபெறும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள நீங்கள் திட்டமிட்டிருந்தால், அப்போது மட்டும், குறைந்தபட்சமாக 6 வார முன்பதிவு தேவைப்படுகிறது. நீங்கள் வெளி நாடுகளிலிருந்து வருபவர் என்றால், ஈஷா யோக மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டாம். தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2013. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact Us View our Copyright and Privacy Policy